கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில் செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தனது 3-ம் கட்ட, மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தின் 2-வது நாளான நேற்று, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வானூர், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்தார். சென்ற இடமெல்லாம், பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.