66 நள்ளிரவில் மா தெளிவாய்

66 நள்ளிரவில் மா தெளிவாய்

தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள், தமிழ் அறிந்த விசுவாச கவிஞர்களால் தமிழில் எழுதப்பட்டவை ஆகும்.அவை இந்தியாவில் வழக்கிலிருந்த இராகம் ,தாளம் கொண்டே இயற்றப்பெற்றன. பாமாலைகள் எனப்படும் HYMNS ஆங்கிலம் ,ஜெர்மன் ,இலத்தீன் போன்ற பிற மொழிகளில் இயற்றப்பட்டு பாடப்பட்டு பிரபலமான பாடல்கள் ,தமிழில் மொழிமாற்றப்பட்டு ,பாமாலைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.இவை கி.பி. 1949 முதல் வெளியிடப்பட்டு வருகிறது.பிற மொழி இராகங்களை அப்படியே எடுத்தாண்டு பாமாலைகள் பாடப்படுகின்றன. 1.பெரும்பாலான பாமாலைகள் துன்ப துயரில் தத்தளித்த விசுவாசிகளால் இயற்றப்பட்டவை. இயேசுவே கல்வாரியில் , பாமாலை எண் 333 ,இயற்றிய பெண் கவிஞர் FANNY J CROSSBY என்பவர் தன் வாழ்நாள் முழுதும் கண் பார்வையின்றி வாழ்ந்தவர். நான்பாவிதான் ஆனாலும் நீர் ,பாமாலை எண் 292,இயற்றிய CHARLOTTE ELIOT என்பவர் தன் 30 வது வயதில்,வியாதியால் கால்கள் முடமாகி, இறுதிவரை இன்னலுற்றவர். தான் மணந்துகொள்ளவிருந்த இரு பெண்கள் திருமணத்துக்கு சில நாள் முன் விபத்தாலும், நோயாலும் இழந்து, மனம் நொந்து, வறுமையில் வாடிய ,JOSEPH SCRIVAN என்பவர் இயற்றிய பாமாலை எண் 376 -பாவ சஞ்சலத்தை நீக்க. 2. பல பாமாலைகள் நூற்றாண்டுகள் கடந்தவை. ஓசன்னா பாலர் பாடும் பாமாலை எண் 92 . எட்டாம் நூற்றாண்டு பாடலாகும். 3.தமிழ் கீர்த்தனை இயற்றிய சிலர் ,சில பாமாலைகளை மொழிமாற்றம் செய்துள்ளனர். என் மீட்பர் உயிரோடிருக்கையிலே ,கீர்த்தனை இயற்றிய ஞா சாமுவேல் ஆயரவர்கள்,இரத்தம் காயம் குத்தும் பாமாலை எண் 102 , போன்ற சில பாமாலைகளை தமிழ்ப்படுத்தியுள்ளார். 4.பல பாமாலைகளின் இறுதி சரணம் வாழ்வின் முடிவு, மோட்சம் ,நிலைவாழ்வு குறிப்பனவாக அமைந்துள்ளன. இத்தகு சிறப்பான பாமாலைகளை புத்தக எண் வரிசைப்படி பதிவேற்றம் செய்துள்ளோம்.பணத்துக்காகவோ பொருளுக்காகவோ புகழுக்காகவோ இவை பதிவேற்றப் படவில்லை.மாறாக -- 1.பாமாலைகளில் அதிகமான பாடல்களை அறிந்து தொழுகையிலே பயன்படுத்த 2.பாமாலைகள் பாடும் வழக்கொழியாமல் பாதுகாக்க 3.பாமாலைகளை சரியான இராகத்தில் பொருளுணர்ந்து பாடி இறையருள் பெற இந்தியா முழுமையிலுள்ள தமிழ் திருச்சபை ஆலய தொழுகை பதிவேற்றங்களிலிருந்தே பல பாமாலைகள் எடுக்கப்பட்டுள்ளன.காப்புரிமையற்ற இணைய பதிவுகளிலிருந்து சில பாடல்கள் பெறப்பட்டுள்ளன . காப்புரிமை பெற்ற பதிவுகளிருந்தால் அனுமதியுங்கள்; வேண்டாமெனில் எமக்கறிவியுங்கள் ; வேறு பாடல் மாற்றிவிடுகிறோம். பாமாலைகளை கேட்டு கற்று பரமனைப்பாடி மகிழுங்கள் ;உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் . நன்றியுடன் ஜெயகர்