திருச்சதகம் 3-சுட்டறுத்தல்| பாடல் வரிகளுடன்| மாணிக்கவாசகர்| Thiruvasagam| Manikavasakar| with lyrics

திருச்சதகம் 3-சுட்டறுத்தல்| பாடல் வரிகளுடன்| மாணிக்கவாசகர்| Thiruvasagam| Manikavasakar| with lyrics

#திருவாசகம் #திருமுறை #மாணிக்கவாசகர் #Thiruvasagam #Thirumurai #Maanikkavaasakar சுட்டறுத்தல் அ௫ளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டியநாடு தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) சிறப்பு: பத்தி வைராக்கிய விசித்திரம் பாடியவர்: மயிலை பா. சற்குருநாதன் ஓதுவார் திருச்சிற்றம்பலம் பதிக வகை: 3. சுட்டறுத்தல் - எண் சீர் ஆசிரிய விருத்தம் வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க் குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணிணையும் மரமாம் தீவினையி னேற்கே.  21 வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான்ஆன வாறு முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே.  22 ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்தியான் யாவரினுங் கடைய னாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர் பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே.  23 பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றென்றே பேசிப் பேசிப் பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப் போற்றியெம் பெருமானே என்று பின்றா நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே.  24 வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற னேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங் கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமா றறியாத எந்தாய் உன்றன் வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே.  25 சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர வந்தெனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.  26 தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதல்அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.  27 கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.  28 விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர அச்சன்ஆண் பெண்ணலிஆ காச மாகி ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே.  29 தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவனடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே.  30 திருச்சிற்றம்பலம் பாடல் ஒலி, வரிகள் https://shaivam.org/ மாணிக்கவாசகர் திருச்சதகம் Playlist from our channel:    • மாணிக்கவாசகர் திருச்சதகம்   மாணிக்கவாசகர் திருவாசகம் Playlist from our channel:    • மாணிக்கவாசகர் திருவாசகம்