LYRICS பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா – (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே 3. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே #OneDayMoses #TamilChristianSongs