பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அடி ஆத்தாடி…….. அடி ஆத்தாடி… குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. பெண் : அடி அம்மாடி.. குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா.. ஆண் : உயிரோடு… பெண் : உறவாடும் ஆண் : ஒருகோடி ஆனந்தம்.. பெண் : இவன் மேகம் ஆக… யாரோ காரணம்.. ஆண் : ஆஆஆ……. ஆண் : அடி ஆத்தாடி… இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி அம்மாடி.. பெண் : மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ.. உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ.. ஆண் : இப்படி நான் ஆனதில்லை புத்திமாறிப் போனதில்லை.. முன்னே பின்னே நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை.. பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ.. படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. இசை கேட்டாயோ…ஓஓஓ….ம்ம்ம்ம்… பெண் : லலலலலா…லலலலல…. லலலல லலா…லலல லா லலல லா லலலலல….லலலலல….லலலலல…. ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்.. உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்.. பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன.. கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன.. ஆண் : கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே.. தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே.. சொல் பொன்மானே…ஏஏஏ….. பெண் : அடி ஆத்தாடி…….. அடி ஆத்தாடி… குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. பெண் : அடி அம்மாடி.. குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா.. ஆண் : உயிரோடு… பெண் : உறவாடும் ஆண் : ஒருகோடி ஆனந்தம்.. பெண் : இவன் மேகம் ஆக… யாரோ காரணம்.. ஆண் : ம்ம்ம்ம்…….. ஆண் : அடி ஆத்தாடி… இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி ஆத்தாடி.. thank for supporting ❤️