பாடல் வரிகள் படியேறி நடந்து வந்தோம் பார்க்கவில்லையா! ரங்கா! பரந்தாமா எங்கள் மீது இரக்கமில்லை யா? பண்பாடி பாடி வந்தோம் பார்க்கவில்லையா ? நான் பாடும் குரல் உந்தனுக்கு கேட்கவில்லையா? திருமாலே நாங்கள் உந்தன் அடிமை இல்லையா? திருமுகத்தை காணுகின்ற பாக்கியம் இல்லையா ? நாடி உன்னை தேடி வந்தோம் தெரியவில்லையா? நாள்தோறும் வணங்கி வந்தோம் கிருபை இல்லையா? நாவார பாடுவது உனக்குத் தொல்லையா? நாமமின்றி ஏது கதி ஏது சொல்லையா? ஏழைகளின் கூக்கரலும் கேட்கவில்லையா ? ஏழு மலையை விட்டு இறங்க மனமும் இல்லையா? பாலும் இந்த மனித வாழ்வு போதும் ஐயனே! இனி வேண்டாம் ரங்கனே! பதமலரை தந்து எங்களை காரும் ரங்கனே! #படியேறிநடந்துவந்தோம் #devotionalsong#mridhangam