எண்ணெய் கிணறு கொண்ட அதிசய கோவில் | Vanamamalai Perumal temple | நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

எண்ணெய் கிணறு கொண்ட அதிசய கோவில் | Vanamamalai Perumal temple | நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் கோவில் 108 வைஷ்ணவ திருத்தலங்களில் ஒன்று. 108 திவ்ய தேசங்களில், பெருமாள் 8 ஸ்தலங்களில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதில், இந்த நாங்குநேரி திருத்தலமும் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இந்த திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய சாலையில் நாங்குநேரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திருவரமங்கை மற்றும் வானமாமலை ஆகியவை இந்தத் திருத்தலத்தின் புராண பெயர்கள். இந்த ஊர், நான்கு ஏரிகளால் சூழ்ந்த ஊர் என்பதால், நாங்குநேரி என்கிற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். இங்கே உள்ள அதிய எண்ணெய் கிணற்றில் இருந்து பெறப்படும் எண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. இந்தக் கோவிலை பரவசத்தோடு தரிசனம் செய்ய, வீடியோவை முழுமையாகப் பாருங்கள்... கோவில் தொடர்புக்கு: 04635 250 119, 94870 60013 #AanmeegamAnantham